அற்புத துஆ

person-house-protection-dua

ஒரு முறை ஒரு மனிதர் ஹழ்ரத் அபூ தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து, “தங்களின் வீடு நெருப்புப் பற்றிப் கொண்டது” என்று கூறினார்.

அது கேட்ட அவர்கள், “என் இல்லத்தில் நெருப்புப் பிடிக்காது” என்றனர். சிறிது நேரம் கழித்தபின், இன்னொரு மனிதர் வந்து அதையே கூற உடனே அவர்கள் முன்பு கூறிய பதிலையே கூறினார்கள். பின்னர் மூன்றாவர் வந்து, “நெருப்பு பிடித்துக்கொண்டே வந்து, தங்கள் வீட்டினருகில் அணைந்து விட்டது, தங்கள் வீடு பற்றவில்லை” என்று கூறினார். அது கேட்ட அவர்கள், “அல்லாஹ் என் வீட்டை எரிக்க மாட்டான் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருந்தது.” என்றார்கள்.

அதற்கு காரணம் என்ன என வினவிய பொழுது, “அண்ணல் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் எனக்கு ஒரு துஆவைக் கற்றுக்கொடுத்து, ஒருவன் காலையில் எழுந்தவுடன், இதனை ஓதி வந்தால் மாலைவரை அவனை எத்துன்பமும் அணுகாது” என்று கூறினார்கள். நான் அதனை வழக்கமாக ஓதிவருகிறேன்.” என்று கூறி அந்த துஆவை ஓதிக் காட்டினார்கள்.

அது வருமாறு:-

“அல்லாஹும்ம அன்த ரப்பீ
லாயிலாஹ இல்லா அன்த்த அலைய்க்க தவக்கல்த்து
வ அன்த்த ரப்புல் அர்ஷில் கரீம்.
மாஷா அல்லாஹுகான வமாலம்
யஷஹ லம்யகுன் வலா ஹவ்ல
வல குவ்வத்த இல்லா பில்லாஹில்
அலிய்யில் அளீம்.
அஹ்லமு அன்னல்லாஹ அலா குள்ளி ஷையின் கதிர்.
வ அண்ணல்லாஹ கத் அஹாத்த பிகுல்லி ஷைஇன் இல்மா.
அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க
மின்ஷர்ரி நப்ஸீ வமின் ஷர்ரி குல்லி
தாபத்தின் அன்த்த ஆகிதுன்
பி நாசியத்திஹா இன்ன ரப்பீ
அலா சிராத்திம் முஸ்தகீம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *