நபியவர்களின் பேணுதல்.

ஒரு தடவை நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவு முழுவதும் விழித்துக்கொண்டு படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே இருந்தார்கள்.இதனைப் பார்த்த நபியவர்களின் மனைவியார்

யாரஸுல்ல்லாஹ்! தங்களுக்கு தூக்கம் வரவில்லையா? என்று கேட்டார். அப்போது நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்

“ ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்த்து. அது வீணாகி விடக்கூடதே என்ற எண்ணத்தில் நான் அதனை சாபிட்டுவிட்டேன். அது ஸத்காவின் பொருளாக இருக்குமோ என்ற சந்தேகம் இப்பொழுது எனக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் தூங்க முடியவில்லை” எனப் பதிலளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *