மூளைக்கு வேலை புதிர்
3 தோழர்கள் ஒரு இரவு மோட்டலில் வாடகைக்கு அறை கேட்க உரிமையாளர் 30 $ என்று தெரிவிக்கிறார். அவர்கள் அதனை ஏற்று நபருக்கு 10$ வீதம் கொடுத்தனர். அவர்கள் அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து உரிமையாளர் தான் 5$ அதிகமாக அறவிட்டதை உணர்ந்து மீதி 5$ ஐ வேலையாளிடம் கொடுத்து அனுப்பினார். 3 தோழர்களும் 5 $ இனை சமமாக பிரிக்க முடியாததால் தலா 1$ வீதம் எடுத்து மீதி 2 $ ஐ இனாமாக வேலையாளிடம் கொடுத்தனர். . இப்போது தோழர்கள் ஒவ்வொருவரும் தலா 9 $ வீதம் 9×3 = 27 $ உம் வேலையாளிடம் $ 2 டாலரும் கொடுத்துள்ளனர். ஆக மொத்தம் 29 $ ஆகின்றது. மீதி 1 $ க்கு என்னவாயிற்று என்பதே கேள்வி.
இலகுவான விடை மூளைக்கு வேலை புதிர்
ஆரம்பத்தில் வாடகை 30 $ ஆதலால் வேலையாளிக்கும் நபருக்கும் மீதி 0 $ ஆகும்
உரிமையாளர் 5 $ கொடுத்த பின் உரிமையாளரிடம் 25$ உம் தோழர்களிடம் தலா 1 $ உம் வேலையாளியிடம் 2 $ உமாக
25$+1+1+1+2=30$ சரியாக உள்ளது
One Reply on “மூளைக்கு வேலை புதிர்”
ko