தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை
வீரன் ஒருவன் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் விந்தையான விலங்கு ஒன்று இருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. அது வருவோர் போவோரை எல்லாம் பயமுறுத்துவது போல நின்று கொண்டிருந்தது.
இதைப் பார்த்த வீரன் கோபம் கொண்டான். தன் கையில் இருந்த தடியால் அதை நன்றாக அடித்தான். இனி அந்த விலங்கு ஒழுங்காக இருக்கும் என்று நினைத்து அங்கிருந்து புறப்படத் தயாரானான்.
ஆனால் அந்த விலங்கோ முன்னைவிடப் பெரிதாகப் பருத்து மேலும் அதிகமாகப் பயமுறுத்தத் தொடங்கியது. மேலும் மேலும் அதை அடித்தான். அவன் அடிக்க அடிக்க அந்த விலங்கு பெரிதாகிக் கொண்டே வந்தது. வீதியையே அடைத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரிதாகி விட்டது.
என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றான் அவன். அந்த வழியாக வந்த அறிஞர் ஒருவர் அவனைப் பார்த்து ‘என்ன செய்கிறாய்? முதலில் அந்த விலங்கை அடிப்பதை நிறுத்து, அந்த விலங்கு என்னது என்று தெரியுமா? அதன் பெயர் தர்க்கம். அதைத் தொட்டால் பெரிதாகிக் கொண்டே செல்லும். பொருட்படுத்தாமல் விட்டு விட்டால் இருக்கும் இடமே தெரியாமல் சுருங்கி விடும்’ என்றார்.
“மூன்று நபர்களுடைய தொழுகைகள் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயத்தில் அவை அவர்களுடைய தலைக்கு மேல் ஒரு சாண் உயரம் கூட செல்வதில்லை.அவர்களில் ஒருவர் தங்களுக்கிடையே தர்க்கம் செய்து கொள்பவர்.”
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)