அறிஞரின் அபூர்வ பதில்கள்
அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தாராளமாய் கேளுங்கள் என்றார். செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர். ஹஸ்ரத் அலி …. Read More
புத்திசாலி பீர்பால்
புத்திசாலி பீர்பால் இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார். “இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர், எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை ஆட்டினர். யாராலும் பேரரசரின் …. Read More
நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே
நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் …. Read More
பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக
பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில் ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு இந்த உயர் பதவியை அளித்து அல்லாஹ் என்னை மன்னித்தான் என நினைத்தேன்.ஆனால் இதற்குக் கரரணம் எனது ஒரு சிரிய நற்செயலே” எனஅவர் விளக்கமளித்தார்.
அறவீனமா ஞானமா?
அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான். உமர் (ரழி) அவர்கள் கோபம் கொண்டு, யஹுதியைப் பார்த்தார்கள், அல்லாஹ்வின் எதிரியே! நான் செவியுறும் இவ் வார்த்தையைக் கேட்டு நான் கண்டவற்றை செய்கிறாயா? இந்நபியை உண்மையைக் கொண்டு …. Read More
தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை
தர்க்கம் செய்யாதே! உதாரணக் கதை வீரன் ஒருவன் வீதி வழியாகச் சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் விந்தையான விலங்கு ஒன்று இருந்தது. பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. அது வருவோர் போவோரை எல்லாம் பயமுறுத்துவது போல நின்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வீரன் கோபம் கொண்டான். தன் கையில் இருந்த தடியால் அதை நன்றாக அடித்தான். இனி அந்த விலங்கு ஒழுங்காக இருக்கும் என்று நினைத்து அங்கிருந்து புறப்படத் தயாரானான். ஆனால் அந்த விலங்கோ முன்னைவிடப் பெரிதாகப் பருத்து …. Read More
நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL)
நூஹ் நபியின் வரலாறு (HISTORY OF NOAH IN TAMIL) ஆதம் நபியின் போதனைகளைப் பின்பற்றி வந்த மக்கள் மத்தியில் ஐந்து பெரியார்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் இறைவழிபாடும் பய பக்தியும் தூய வாழ்வும் எல்லோரையும் கவர்ந்தன. அவர்கள் மிகமிக நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்ந்தார்கள். அதனால் அவர்களின் மதிப்பும் செல்வாக்கும் நாளுக்கு நாள் உயர்ந்தன. அந்தப் பெரியார்கள் மீது மக்கள் அனைவரும் அதிக அன்பு செலுத்தினார்கள். வத்து, சுவா, யஃகூஸ், யஊக், நஸ்ர் ஆகியவைதான் அப்பெரியார் களின் அழகுப் …. Read More
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா? முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது …. Read More
முஹம்மது நபி(ஸல்) பற்றிய ரோமபுரி மன்னர் ஹெர்குலிஸின் சோதிடம்
(குறைஷிகளின் தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள். அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு …. Read More
மூளைக்கு வேலை புதிர்
மூளைக்கு வேலை புதிர் 3 தோழர்கள் ஒரு இரவு மோட்டலில் வாடகைக்கு அறை கேட்க உரிமையாளர் 30 $ என்று தெரிவிக்கிறார். அவர்கள் அதனை ஏற்று நபருக்கு 10$ வீதம் கொடுத்தனர். அவர்கள் அறைக்கு சென்று 30 நிமிடங்கள் கழித்து உரிமையாளர் தான் 5$ அதிகமாக அறவிட்டதை உணர்ந்து மீதி 5$ ஐ வேலையாளிடம் கொடுத்து அனுப்பினார். 3 தோழர்களும் 5 $ இனை சமமாக பிரிக்க முடியாததால் தலா 1$ வீதம் எடுத்து மீதி 2 …. Read More